Sankaraa Naturals
user
userLogin / Signup
0

About Us

About Us

நம்மாழ்வார், தான் கலந்துகொள்ளும் கூட்டங்களில் விவசாயத்தைப் பற்றிப் பேசுவதோடு மட்டுமல்லாமல்... உடல்நலனுக்கு ஏற்ற உணவுகள் குறித்தும் வழிகாட்டுவார். குறிப்பாக, சிறுதானியங்களின் மகத்துவம் பற்றி விரிவாக எடுத்துரைப்பது வழக்கம். இதனால் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக, தமிழக மக்களிடையே சிறுதானியங்களுக்கான வரவேற்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில், இவற்றில் பலவிதமான உணவு வகைகளை எளிதாகச் சமைப்பதற்கு வசதியாக மதிப்புக்கூட்டி ரெடி மிக்ஸாக விற்பனை செய்து வருகிறார், சென்னையைச் சேர்ந்த பட்டதாரி பெண் சாரதா. இவர், சென்னை அம்பத்தூர் பகுதியில் ‘சங்கரா பசுமையகம்’ என்ற பெயரில் இயற்கை அங்காடி ஒன்றையும் நடத்தி வருகிறார்.

 

2013-ம் வருஷம் இந்த அங்காடியை ஆரம்பிச்சேன். தினை, வரகு, சாமை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம்... இதையெல்லாம் விவசாயிகள்கிட்ட இருந்து விலைக்கு வாங்கி மாவாக அரைச்சு விற்பனை செய்யத் தொடங்கினேன். அடுத்தகட்டமா, சிறுதானியங்களை மக்கள் ரொம்ப எளிதா சமைக்குற வகையில புட்டு, இடியாப்பம், சூப், கஞ்சி, இட்லி, தோசை, அடை, பொங்கல் உட்பட இன்னும் பல வகையான ரெடிமிக்ஸ் உணவுகளைத் தயார் பண்ணி விற்பனை செஞ்சுகிட்டு இருக்கேன். இதுக்கு மக்கள் மத்தியில அதிக வரவேற்பு இருக்கு. பாரம்பர்ய அரிசி வகைகள்லயும் பலவிதமான ரெடிமிக்ஸ் தயார் பண்ணி விற்பனை செய்றோம்’’ என்றவர், இந்தத் தொழிலில் கடந்து வந்த ஆரம்பகால நிலை குறித்து விவரித்தார்.

“100 கிராம் சிறுதானியத்துல 6 கிராம் புரதச்சத்து இருக்கு. ஆனா, 100 கிராம் அரிசியில 2 கிராம்தான் புரதம் இருக்கு. சிறுதானியம் உடம்புக்கு ரொம்ப நல்லதுனு தெரிஞ்சாலும்கூட, முன்னாடியெல்லாம் மக்கள் இதை வாங்க ரொம்ப தயங்குவாங்க. காரணம் இதுல சுவையான உணவு வகைகள் எப்படிச் சமைக்குறதுனு நிறைய பேருக்குத் தெரியாம இருந்துச்சு.

அந்த மாதிரியான சூழல்லதான், நிறைய நிகழ்ச்சிகள்ல கலந்துகிட்டு சிறுதானியங் களைப் பத்தியும், அதுல என்னவெல்லாம் சமைக்க முடியும்னு பேசினேன். அடுத்தகட்ட முயற்சியா மீடியாக்கள் மூலம் இதை மக்கள் கிட்ட பரவலா கொண்டு போகலாம்ங்கற ஒரு யோசனை வந்துச்சு. பிரபல சமையல் கலை நிபுணர் செப் தாமு உதவியோட, டிவியில சிறுதானிய சமையல் நிகழ்ச்சி நடத்தினேன்.

சிறுதானியங்கள்ல புட்டு, இடியாப்பம், பொங்கல், இட்லி, தோசை மாதிரியான உணவு வகைகள் மட்டுமல்லாமல், பர்பி, லட்டு, அல்வா உட்பட இன்னும் பல வகையான இனிப்பு வகைகள், முறுக்கு, சீடை, மிக்சர், காரசேவ் மாதிரியான நொறுக்குத் தீனிகளும் செய்ய முடியும்ங் கிறதை செஞ்சு காட்டினேன்.

தமிழ்நாட்டுல பல்வேறு பகுதிகள்ல நடந்த கண்காட்சிகள்ல சிறுதானிய உணவு வகைகளைக் காட்சிப்படுத்தி, மக்கள்கிட்ட இதைப் பத்தி எடுத்து சொன்னேன். படிப் படியா வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பிச்சது. ஆர்டர் கொடுக்குற வங்களுக்குச் சிறுதானிய உணவு வகைகள் சமைச்சும் கொடுக்குறேன்.

என்னோட அனுபவங்கள வெச்சு ‘சுவைதரும் சிறுதானியங்கள்’-னு ஒரு புத்தகம் எழுதினேன். இந்தப் புத்தகத்த படிச்சுட்டு நிறைய பேர் எங்களுக்கு சொல்லித் தர முடியுமான்னு கேட்டாங்க. அவங்களுக்கு சிறுதானிய சமையல் எப்படிச் செய்றதுனு வகுப்புகளும் எடுத்தேன். இவ்வளவுக்கும் சிறுதானிய தயாரிப்புக்குனு எங்க போயும் பயிற்சி எடுத்துக்கல. அனுபவம் மூலமாவே செஞ்சு கத்துக்கிட்டதுதான்” என்றவர் சிறுதானிய கொள்முதல் குறித்துப் பேசினார்.

“எனக்குத் தேவையான சிறுதானியங்களைப் பெரும்பாலும் தேனி மாவட்டத்துல இருந்துதான் கொள்முதல் செய்றேன். காரணம் அங்கதான் சிறுதானியங்கள் தோல் நீக்குற அரவை ஆலைகள் நிறைய இருக்கு. வியாபாரிகள், சிறுதானியங்களை எங்க வாங்கினாலும் தோல் நீக்க தேனிக்குக் கொண்டு வந்துடறாங்க. அதனால, எந்த வகையான சிறுதானியத்தைக் கேட்டாலும் உடனடியா கிடைச்சிடுது.

சென்னைக்குப் பக்கத்துல சிறுதானியங்கள் கிடைச்சாலும்கூட தோல் நீக்கி அரைக்கிறதுக்கு இடம் தேட வேண்டியதா இருக்கு. பாரம்பர்ய அரிசிகளுக்கு பிரச்னை இல்லை. திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள்ல உள்ள இயற்கை விவசாயிகள்கிட்ட இருந்து பாரம்பர்ய அரிசிகள் வாங்குறேன். இயற்கை விவசாயத்துல விளைவிக்கப்பட்ட துவரை, உளுந்து, நிலக்கடலை, பாசிப்பருப்பு, பாசிப்பயறு, வேர்க்கடலை, புளி, மஞ்சள், மிளகாய் உள்ளிட்ட பொருள்களையும் விவசாயிகள்கிட்ட இருந்து வாங்கி என்னோட அங்காடி மூலம் மக்கள்கிட்ட விற்பனை செய்றேன்.

நம்மாழ்வார் ஏற்படுத்திய தாக்கத்துனால என்னுடைய சிறுதானிய பயணத்தை 2013-ம் வருஷம் தொடங்கினேன். அடுத்த வருஷம் 2023-ல சர்வதேச சிறுதானிய ஆண்டுல அடியெடுத்து வைக்கிறேன். வாடிக்கையாளர்களோட ஆதரவுனால தொடர்ந்து 10 வருஷமா இந்தத் தொழிலை வெற்றிகரமா செஞ்சுகிட்டு இருக்கேன். இந்தத் தொழில், எங்களுக்கு ஒரு வகையான நிம்மதியையும், சந்தோஷத்தையும் கொடுக்குது. இதுக்குக் காரணமாயிருந்த நம்மாழ்வாருக்கு நன்றி சொல்லிக்கிறோம். மக்களோட ஆரோக்கியம்தான் எங்களுடைய இலக்கு. அதை நம்மாழ்வார் வழியில் மக்களிடையே கொண்டு சேர்க்க, என்னென்ன செய்ய முடியுமோ அதைத் தொடர்ந்து செய்ய முயற்சி செய்வோம்” 

தொடர்புக்கு, சாரதா,

0
Home wishlist0